Saturday, March 24, 2012

வீழ்வேனென்று நினைத்தாயோ?


தேடி சோறு நிதம் தின்று பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி 
மனம்வாடி 
துன்பம் மிக உழன்று பிறர்வாழ 
பல செயல்கள் செய்து நரைகூடி 
கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு 
இரையென மாயும்பல வேடிக்கை
 மனிதரை போல நான் 
வீழ்வேனென்று நினைத்தாயோ